இடுகைகள்

ஜூலை, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மரணத்தின் வாசலில்

படம்
சூரிய கிரணங்கள் இல்லை விடியலுக்கான நேரம் போல, அந்த மாலை அகண்டு விரிந்த வெளிகளுக்கு அப்பால்... நான் மட்டும் நடக்கிறேன் தனியாக என்னுடல் - நான் படுத்த இடத்திலேயே கிடக்கிறது. அறையின் மத்தியில் பாய்களின் பந்தியில் நான் கிடக்கிற கோலம்... எனக்கும் சில நேரம் கேள்வியை தரும். மேகக் கூட்டங்கள் மெல்லக் கரைந்துக் கொண்டிருக்கும் வான்வெளியில்... இன்னும் இன்னும் என் மனக் கண்ணிலேயே கிடக்கிறது... அந்த அந்திமக்காலங்கள். மரணத்தின் வாசலில் வாழ்க்கையோடு போரிட்டுக் கொண்டிருக்கிறேன்... வாழ்க்கையின் வாசலில் மரணத்தொடுப் போரிட. எனக்கு நானே புறமுதுகு... எனக்கு நானே எதிரி... எனக்கு நானே தீவைக்கிறேன்... என்னுடல் எரிகிறது... அது எரியும் வரை அருகிலிருந்து பார்க்கிறேன் அமைதியாக. பின்பு, நான் மட்டும் நடக்கிறேன் தனியாக... என்னுடல் - நான் படுத்த இடத்திலேயே கிடக்கிறது. வேக சுகுமாரன்  

காதலுக்காய்...

படம்
காதலுக்காய்...  உன்னையும் என்னையும் அருகருகே எழுதி பார்த்தேன். அப்பொழுதும் சேரவில்லை. வேக சுகுமாரன் 

வந்து வந்து கரைவதாலும்..

படம்
வந்து வந்து  கரைவதாலும்.. வராமலே போவதாலும்.... கடலின் நுரைதான் காதலின் வடிவம். வேக சுகுமாரன்

கவிதை..உறைந்திருக்கும் உடலை சூடாக்க வேண்டும்..!

படம்
                                                               கவிதை ஒரு மனிதனை  எப்படி வைத்திருக்க வேண்டும் என்று எனக்கு சொல்லித் தந்தவர் இந்த தாய். இவர் எழுதிய புத்தகத்தைத்தான் நான் என் கல்லூரி நாட்களில் தமிழ் பாடமாய் படித்திருக்கிறேன்.                                                               அந்த தாயை நான் எனது தொழில் நிமித்தமாக சந்தித்தபோதுதான் எனக்கே தெரிந்தது அவர்தான் என் தமிழின் ஆதி என்று. அந்த தாயை நான் சந்தித்தபோது அடைந்த  மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்று சொல்லலாம்.            ...

நம்பிக்கை..!

படம்
  உனக்கும் எனக்கும் ஒன்றுதான் வித்தியாசம். உன்னுடையது   நம்பிக்கை..! என்னுடையது  தன்னம்பிக்கை..!! -வேக சுகுமாரன் 

உன் முகத்தில்..!

படம்
 மஞ்சளின் வண்ணத்தை அன்றுதான் பார்த்தேன்  நீ குளித்துவிட்டு வரும் வழியில்.. உன் முகத்தில். வேக சுகுமாரன் 

நிம்மதிக்காய் பீரடித்தேன்..!

படம்
கடுகளவும் மறைக்காத உன் நினைவை காலத்தின் பயணத்தில் மறந்து போனேன்... உன் பார்வைக்காய் பல்லிளித்த காலம் அது. உன் பேச்சுக்காய் நான் படித்த நேரம் அது. ஓரிரவு உன்னுடனே இருந்தமட்டும்... இனித்ததங்கு நெஞ்சமெனும் பகுதியெல்லாம். காரிரவாய் போனதனால் கடிந்துகொண்டே... வீதியெலாம் விதிபிடித்து வீடு வந்தேன். இமை இரண்டும்  இறக்கி வைத்த தீண்டளினால்... நண்பனுக்காய்.... நானும் சொன்னேன் ஐ லவ் யூ. முத்த மழை பொழியவில்லை இருந்தமட்டும்... அத்தனையும் அடி உனக்காய்  இழந்து நின்றேன். நாம் பழகி நாள் கணக்கில் ஆனபின்னே... நள்ளிரவில் நான்விடுத்த வார்த்தைகளால்.. கால் கடுக்க காதல் வந்து ஓடியதே... நிம்மதிக்காய் நித்திரைக்காய் பீரடித்தேன்... நினைவு வர கனவு வர நேர்ந்து கொண்டேன்... உன் எனக்காய், என்னுனக்காய், இறுதி வரை... மறைக்காது மறைத்துவைத்த  காலம் அது. இரவெல்லாம் எனக்குமட்டும் விடிந்திருக்கும்... விடிகாலை வெயிலெல்லாம் மறந்திருக்கும்... இதமான போதை எனை இழுத்து வந்து போட்டுடைத்த காலமெலாம் அன்றேதான். இதுவரைக்கும் இப்பட...

தங்கமும்..வெள்ளியும்..!

படம்
                                           தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர் சாந்தி சவுந்திரராஜனுக்கு உதவிகள் கிடைக்கவில்லை என்று வந்துள்ள செய்திகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருக்கு உதவிகள் கிடைக்கவில்லை என்று கூறுவது சரியல்ல என்கிறார் இந்திய தடகள சம்மேளனத்தின் துணைத்தலைவர் வால்டர் தேவாரம்.                      ஒரு கிரிக்கெட் வீரரோ...ஒரு கைபந்து ஆட்டக்காரரோ... ஆசிய போட்டியில் கலந்துகொண்டு வெள்ளி பதக்கத்தோடு திரும்புகிறார் எனில் இந்தியா அவர்களை சிவப்பு கம்பள மரியாதையோடு வரவேற்று இருக்கும். அவர்களால் ஏற்படும் சிக்கல்களை தானே முன்னின்று தீர்த்துவைக்க முயன்றிருக்கும்.                       அவர்கள...

அடையாளம் என்கிற அடைப்பு குறிக்குள்!

படம்
ஏதோ  ஒரு செயலில் - நாம் மற்றவர்களில் இருந்து வேறுபட்டிருப்பதாய் கருதினால்.... ஏதோ ஒரு சிந்தனையில்  - நாம் மற்றவர்களை பின்னுக்கு தள்ளியிருப்பதாய் உணர்ந்தால்.... எதாகிலும் ஒரு சமயத்தில் மக்கள் நம்மை அங்கீகரித்திருப்பதாய் - நாம் பிதற்றினால்..... வாழ்வின் தொடக்கமான அந்த தருணத்திலேயே நமக்கான அழிவும்  ஆரம்பமாகிவிடுகிறது.  மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துகிற, முதன்மை படுத்துகிற, அந்த சிந்தனைதான்.... பின்னாளில் மனிதர்களிடமிருந்தே நம்மை தனிமை படுத்திவிடுகிறது. பிரிக்கவும் செய்கிறது. ஏனெனில், மனிதனின் மனம் ஒரு போதும் சமாதானத்தை தன் இறுதி காலம் வரை கேட்டதேயில்லை. ஏனெனில், மனிதர்கள் ஒருபோதும் தங்களை தோல்விகளை தாங்கும்  திறன் படைத்தவர்களாய் ..... உணர்ந்ததேயில்லை. இவர்கள்  இன்னொருவரை... தம் குழந்தைகளுக்கு அடையாளபடுத்தும் வரை இவர்களுக்கே தெரியாது இவர்களே ஒரு அடையாளமாய் ... இருக்கிறார்கள் என்று. ஏன் இதையெல்லாம் நாம் யோசிப்பதேயில்லை....? எப்பொழுது... ஒருவனுக்கு வெற்றி சுமையாக இருப்பதில்லையோ அப்போதே - அவன் தோல...

நாகரிக ஏகாதிபத்தியம்!

படம்
மனித சமூகத்தின் நாகரிக ஏகாதிபத்தியத்தை இந்த வார்த்தைகள் நமக்கு உணர்த்துகின்றன. அம்பேத்கர் எனும் அரசியலுக்கு அப்பாற்பட்ட மாபெரும் தலைவனை நாம் இழிவு படுத்தியிருக்கிறோம் என்பதை எப்போது இவர்கள் உணரப்போகிறார்கள்? நேருவையோ..காந்தியையோ ..வேறு ஒருவர் சாட்டையால் அடிப்பதை போல் இப்படி ஒரு செய்தி இந்தியாவில் வெளிவருமா? வராது. ஏனென்றால் இந்தியா நாகரிக ஏகாதிபத்தியத்தின் இலக்கணமாய் திகழ்கிற நாடு. உயிர்மை பத்திரிகையில் சகோதரர் மனுஷ்யபுத்திரன் தலையங்கத்தில் பகிர்ந்துகொண்ட வார்த்தைகளை உங்களுக்கும் பகிர்கிறேன்......படித்து பாருங்கள் ...... -வேக சுகுமாரன்     சி.பி.எஸ்.ஈ. அரசியல் பாட நூலில் இடம் பெற்று சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் ஒரு கார்ட்டூன் இன்று அடையாள அரசியல் பற்றிய பெரும் விவாதங்களை உருவாக்கியிருப்பது மட்டுமல்ல, அம்பேத்கரின் வரலாற்றுப் பாத்திரம் பற்றிய விவாதங்களையும் எழுப்பியிருக்கிறது. 1949ல் புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட் சங்கர் பிள்ளையால் வரையப்பட்ட இந்தக் கார்ட்டூன் அரசியல் சாசனத்தை இயற்றுவதில் ஏற்பட்ட தாமதத்தை விமர்சிக்கிறது. இந்திய அரசியல் சாசனத்தின் தந...

poovulakin nanbarkal

படம்

எல்லாம் விதியின் வசம்

படம்
ஏதேனும் ஒரு பக்கத்தை வாசிக்கிறபோது நமக்கும்.. இந்த பக்கத்துக்கும்... -ஏதோ தொடர்பு இருப்பதாக நாம் உணர்ந்தால்... நம்மையும் நம் வாழ்க்கை சூழலையும்... எங்கிருந்தோ இது கவனிக்கிறது என்று நாம் நினைத்தால்... அவமானங்களையும்... அசிங்கங்களையும்... சுமந்துகிடக்கிற வாழ்க்கையின் நெடிய பயணத்தில்... சில நேரம் திருப்தியும், சில நேரம் அதிருப்தியும் ஏற்படுகிறது நமக்கு. உப்பில்லாத உணவு உண்டபிறகு... எப்படி நம்மால் சுவையை ருசித்ததாய் சொல்லமுடியும்? எத்தனையோ பேரில்... யாரேனும் ஒருவருக்காகவாவது நாம் இதை செய்யவேண்டியிருக்கிறதே. அவசர கதியில் அறிவு சில நேரம் மங்கி போவது உண்டு. வரலாறு வலியையும், தோல்விகளையுமே அதிகம் பேசுகிறது. அப்படியென்றால்... வரலாறு  வெற்றிகளின் கதையில்லையா?  ஆம்,    வரலாறு தோல்விகளின் கதை. வரலாற்றின் நெடிய பயணத்தில் சில முற்றுக்கள் முட்டாள்தனமாய் முடிந்திருக்கும். அதை தூசு தட்டும் உரிமை இயல்பாகவே நமக்கு கிடைத்த ஒரு வரம். எந்த ஒரு நிகழ்வாக இருக்கட்டும் தவறுகளை திரும்ப திரும்ப செய்வத...

சொர்க்கம், நரகம் என்றெல்லாம்!

படம்
சொர்க்கம்.. நரகம்...என்றெல்லாம்.... இருவேறு உலகம் இல்லவே இல்லை. மாறாக நாம் வாழும் இந்த நிமிடங்களை சொர்க்கமாகவும்... நரகமாகவும்... மாற்றிகொள்கிற தன்மை நம்மிடம்தான் இருக்கிறது.  -வேக சுகுமாரன்.

எரியும் பனிக்காடு

படம்
உலகம் உண்மையை எளிதில் மறந்துவிடுவதில்லை.....அந்த வகையில் இந்த பக்கங்களும் நம்மை யோசிக்க செய்யும் என்கிற வார்த்தைகளோடு  முடிக்கிறேன். இந்த நாவலை எழுதிய பி.எச்.டேனியல் அவர்களுக்கும், இதை கையில் எடுத்து வாசனை பிடித்த அத்தனை பேருக்கும், சமீபத்தில் இதன் கருவை மையமாக்கி திரைக்காவியம் படைத்த இயக்குனர் பாலாவுக்கும் எனது நன்றிகள் என்றென்றும்.                                                                                                  -வேக சுகுமாரன். சமீபத்தில் நான் வாசித்த தமிழ்நாவல்களில் மு...

பின்பெதற்க்கு பிணந்தின்னிகள்!

படம்
மலைநாட்டு கழுகுகள் எல்லாம்... ஏரிக்கரைக்கு வந்தபோது எல்லோரும் சந்தோஷித்தனர் என்னைத் தவிர. என் நாடு மனித இனம் வாழ முடியாமலா போனது? பின்பெதற்க்கு பிணந்தின்னிகள் இங்கு? -வேக சுகுமாரன்

இது தான் காதல் என்பதா?

படம்
முகம் பார்த்து பேச மொழி தெரியாத பொழுதும்... உன் முகம் எனக்கு ஆயிரம் அர்த்தங்களை சொல்கிறது. இது தான் காதல் என்பதா? - வேக சுகுமாரன் 

ஆர்மோனியம்

படம்
                                                                                       "ஏதோ ஒருவகையில் ஒவ்வொரு  மனிதனோடும் நெருங்கிய தொடர்பில் இருக்கிறது  இசை.  எதாகிலும்  ஒரு பாடலை தனக்கு தோன்றும்  ராகத்தில் ஒவ்வொரு மனிதனும் பாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பாடுகின்றவர்களுக்கு அதில் இருக்கிற் பிழைகள் தெரிவதில்லை. ஆனாலும், பாடுகிறார்கள். ஏனென்றால் இசை அவர்களை ஏதோ ஒரு வகையில் சாந்தபடுத்துகிறது. இப்படி இன்பத்தையும் அமைதியையும் மனதின் மையத்தில் கொண்டு சேர்க்கவும் பாதுகாப்புக்காக்கவுமே  இசை உருவாகி  இருக்கிறது என்பது ஒரு வரலா...

கைநாட்டுக்காரனும்

படம்
கண்களை இரவுக்கு கொடுத்துவிட்டு இதயத்தை சொரிந்து கொண்டிருக்கும் கைநாட்டுக்காரனும் பட்டம் பெறுவது காதலில்தான்... முட்டாப்பய., கிறுக்குப்பய., ஊதாரி., உதவாக்கரை. -வேக சுகுமாரன் 

காதலெனும் வீதியில்..!

படம்
நட்பு எனும்  நாலாவது குறுக்குசந்தில் தான் நானும் அவளும் குடியிருந்தோம். அருகருகே எங்கள் வீடு., தாமிரக் கம்பியில் மின்சாரம் போகாமலா இருக்கும்...? பள்ளிக் கூட வாசனை மறந்து பல நாட்க்கள் ஆன பின்னும், தினம்.. தினம்... தீபாவளியாய் நீள்கிறது. அவளின்  நினைவுகள் எனக்குள். - வேக சுகுமாரன் 

சிந்தனையிலேயே கழிகிறது சில நிமிடங்கள்...

படம்
ஒரு மாலை வேளையில் மரணத்தின் மறு கரையில் நின்றிருந்த என்னை பார்த்து சிரிக்கவும் முடியாமல், அழவும் முடியாமல், சிந்தனையிலேயே கழிகிறது சில நிமிடங்கள்... அழுக்கு வானத்தின் அடிப் பகுதியில் இருந்து யாரோ எச்சில் துப்பியதைப் போல தூரல்கள்... மரணத்தை கையில் வைத்து அழகு பார்த்தேன்... மரணம் என் கையை அரித்துக் கொண்டிருப்பது  தெரியாமலே... மரணத்துக்கு எங்கே தெரியப் போகிறது? நான் மரணத்தையும்.. நேசிக்கிறேன் என்று. காதல்  எத்தனை  அர்ப்புதமானது தெரியுமா? அதுதான் எனக்கு கற்று தந்தது மரணத்தை காதலிக்க.  -வேக சுகுமாரன் 

விதி விரிக்கிற வலை.

படம்
  காதல்... விதி விரிக்கிற வலை. இதயம் எனும் இரத்தப் பிரதேசம் இருக்கிற அனைத்து உயிர்களுக்கும் காதல்... விதி விரிக்கிற வலை. மீன்களுக்கு விரிக்கப்படும் மை வலைப் போல... இது தை வலை. இதயத்தை இரண்டாய் கிழித்து தைப்பவளின் வலை... ஆம்,  காதல் ... விதி விரிக்கிற வலை.  -வேக சுகுமாரன்.
படம்
செருப்பால் அடிக்க நினைக்கிறேன் - ஆனால், முடியவில்லை  என்னை. பொய்யும்.. புரட்டும்... நிறைந்த உலகில் வாழ்வதை எண்ணி... செருப்பால் அடிக்க நினைக்கிறேன் - ஆனால், முடியவில்லை  என்னை. -வேக சுகுமாரன்  

விழியதில் நீ...

படம்
விழியதில் நீ... விழுந்த  நொடி..தெரியாது விசும்புகிறது என் நெஞ்சம்... - வேக சுகுமாரன்