இடுகைகள்

2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கிழக்கின் மகள்

படம்
  காலம் சிலரைத்தான் நமக்கு அடையாளம் காட்டுகிறது. காலம் சிலரைத்தான் வரலாற்றில் பதித்துச் செல்கிறது. அந்த வகையில், பயங்கரவாதத்தின் கோர கரங்களால் சிதைக்கப்பட்ட பாகிஸ்தானில்,  மரணத்தறுவாயிலும் மக்களுக்கு ஜனநாயகத்தை போதித்த  பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர், பெனாசிர் பூட்டோவை நினைவு கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல... அவசியமும் கூட.... பெனாசிர், பாகிஸ்தான் மக்கள் கட்சியின்  தலைவர் மட்டுமல்ல... சர்வதேச அளவில் ஒரு இசுலாமிய தேசத்தை ஆட்சி செய்த முதல் பெண் தலைவரும் ஆனவர் .... பழமைவாதம் பேசிய  தேசத்தில் ஜனநாயக பாடம் எடுத்தவர்களில் ஒருவர்.....  ஜனநாயகத்தை மலரச்செய்யும் முயற்சியில் தன் உயிரை துச்சமென கருதியவர் ... சரியாக பத்தாண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ராவல்பிண்டியில் வைத்து அவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இன்றும் மனிதத்தை நம்பும் யாராலும் அத்தனை எளிதில் மறக்க கூடியதல்ல... தன்னுடைய வாழ்க்கையின் அத்தனை பக்கங்களிலும் துரோகத்தையும், எதிரிகளையும் பார்த்து பார்த்து... பழுக்க காய்ச்சி வடிக்கப்பட்ட வாளாய் மிளிர்ந்தவர் பெனாசிர். மலாலாவை தெரிந்...

எய்ட்ஸ் எனும் உயிர்க்கொல்லி

படம்
உலகில் யாரும் நோயுடன் பிறக்க நினைப்பதில்லை. ஆனால், உயிரியல் கூறுகளின் அடிப்படையில் நோய் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. ஒரு செல் உயிரி முதல் ஒப்பற்ற மனித இனம் வரை நோய்க்கான காரணிகள் அளவிட முடியாத விகிதத்தில் பரவியிருக்கின்றன. யார் நோயாளி,💉 என்ன விதமான நோய் பரவியிருக்கிறது, எவ்வாறு குணப்படுத்த முடியும்💊 என்பதே நவீனத்துவம் பெற்ற பரிணாமம். அந்த வகையில் எலும்புருக்கி என்று ஏதோ கிராமத்து வைத்தியர்களால் கடந்த காலங்களில் சொல்லப்பட்ட #எய்ட்ஸ் எனும் உயிர்க்கொல்லி மனித இனத்தை அழிக்கும் அத்தனை வேலைகளையும் அழகாக செய்து கொண்டிருக்கிறது. கடந்த 2016 ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி📃 உலகில் சுமார் 4 கோடி மக்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சர்வதேச மருத்துவ கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. 2030 க்குள் அனைவருக்கும் அடிப்படை மருத்துவ சேவை💯💊 கிடைப்பதை உறுதி செய்ய அந்த அமைப்பு திட்டம் வகுத்து செயல்படுத்தி வருகிறது. நாட்டுக்கு நாடு என இருந்த எய்ட்ஸ் நோயாளிகள் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் வீதிக்கு வீதி என சுருங்கியிருப்பது மிகுந்த வேதனைக்குரியது. மருத்துவத்தின்💊 எந்த கூறுகளாலும் கு...

கருகும் பிஞ்சுகள்

படம்
பள்ளி மாணவர்கள் தற்கொலைக்கு முயல்வதும், தற்கொலை செய்து கொள்வதும் சமீபகாலமாக அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற சம்பவங்கள் குறித்து பரவலாக பேசப்படுவதும் வருத்தத்திற்குரியதாகவே உள்ள நிலையில், தற்கொலைக்கு தள்ளப்படும் காரணம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் அனைவருக்கும் இருக்கிறது. கோவையில் தனியார் பள்ளி மாணவர் தற்கொலை. வேலூரில் அரசு பள்ளி மாணவிகள் 4 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை. தஞ்சையில் +2 மாணவர்தூக்கிட்டு தற்கொலை. மதுரையில் தனியார் பள்ளி மேல்தளத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை முயற்சி  என வரிசையாக தற்கொலைகள் நிகழ்வதும் தற்கொலைக்கு முயல்வதும் நடந்து  கொண்டேயிருக்கின்றன. பிள்ளைகள் நன்கு படித்து சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என விரும்பும் பெற்றோர்களுக்கு இது போன்ற தற்கொலைகள் பேரிடி அல்லாமல் வேறென்ன? தனியார் பள்ளிகள் அதிகரிப்பால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதாகவும், குறைந்த ஊதியத்தில் அவசர கல்வியை திணிக்கும் ஆசிரியர்களின் படுபாதக செயல்பாடுகள் தான் தற்கொலைகளுக்கு காரணம் என கூறி ஒதுக்கிவிட முடியவில்லை. அரசு பள்ளிகளிலும் மாணவர்க...

சீரழிந்த சுகாதாரம்

படம்
கடந்த 2001ம் ஆண்டு முதன் முதலாக பெண்களுக்கு மேம்பட்ட சுகாதார வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்காக தமிழகத்தில் மகளிர் சுகாதார வளாகம் அமைப்பதற்கான திட்டம் துவக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பாதுகாப்பான குளியலறைகள், கழிவறைகள் ஒவ்வொரு கிராமத்தில் கட்டப்பட்டு, பெண்களின் சுகாதாரமும், கிராமத்தின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்பது அரசின் அறிவிப்பு அருமையான இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டிருந்தால் உண்மையில் பாதுகாப்பும், சுகாதாரமும் உறுதி செய்யப்பட்டிருக்கும் தான். ஆனால் அது நடக்கவில்லை என்பது மிகுந்த வேதனையானது. பெரும்பாலான கிராமங்களில் இத்திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட கழிவறைகள் செயல்பாட்டில் இல்லை. செயலபாட்டில் இருக்கும் கழிவறைகளை கணக்கில் எடுத்தால் கூட 100 க்கு வெறும் 20 சதவீதம் கழிவறைகளே பயன்பாட்டில் இருப்பதாக அறிந்து கொள்ள முடியும். இதில் கழிவறைகள் கட்டாமல் கட்டியதாக கணக்கு காட்டியதும், கட்டி பாழடைந்து சீரமைக்கப்படாத கழிவறைகளும் அடங்கும். இதற்கு நம்மை தவிர வேறு யாரும் பொறுப்பாக முடியாது. ஊராட்சி மன்ற தலைவர் முதல் ஊரக வளர்ச்சி துறை வரை இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான பட...

உயில் ஒன்று விமர்சனம்

படம்
மாயா மீடியா மற்றும் ஆர்ம்ஸி பிலிம்ஸ் சார்பில் ஆர்ம்ஸ்ட்ராங் தயாரிக்கும் படம் "உயில் ஒன்று".  அறிமுக இயக்குனர் தீபன் மிகவும் அநாயாசமாக தொழில்நுட்பங்களோடு பயணித்திருக்கிறார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு பேசிய இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான், படக்குழவை வியந்து பாராட்டியிருக்கிறார். சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த பல ரகசியங்கள் இத்திரைப்படத்தின் மூலம் உடைபடும் என கூறப்படும் நிலையில், அதனை  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உறுதிப்படுத்தியுள்ளது.  இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. .

பேய்மழை

படம்
பின்னிரவில் விழித்திருந்து பிடரி மயிரலைய சொறிந்து கண்ணிரண்டாய் திரளும்  க(பெ)ற்றோரை காக்கும் திறன் கேட்டேன் அம்மே விண்ணதிர வந்திறங்கி வீதி தெருவெல்லாம் குலுங்க சிரித்து பன்னிரண்டைப் பாடி பரவசம் தந்தாயே.... முக்கனியா.. முத்தமிழா.. மூப்பர் சொல்லேடா.. மூதூர் கதையா என்றறியோம் செப்பனிட வந்தேன் சீர்தூக்கி பார்ப்பாயோ... செந்நதியா... செண்பகமா... சேர்ந்தாடும் வஞ்சம்; வெண்பனியா... வானுயர்ந்து வீழ்த்திடுமோ எனை பேய்மழை.

வார்த்தைகள்

படம்
வார்த்தைகள் அற்புதமானவை, அழகானவை, ஆக்ரோஷமானவை, எளிமையானவை, இன்னும் என்னென்னவோ இப்படி வார்த்தைகளை சொல்லிக்கொண்டிருக்கலாம் நாம். ஏனெனில் வார்த்தைகள் வலிமையானவை என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வார்த்தைகள் தான் எல்லாவற்றையும் செய்கின்றன. வார்த்தையின் ஜீவனை பொறுத்து அதன் அழகியலும், தேய்மானங்களும் அமைகின்றன. பகலிரவு ஆட்டங்களைப் போல வார்த்தைகள் மாறி மாறி பிறந்து கொண்டேயிருக்கின்றன அதன் இயல்பில். பிறப்பில் இருந்து இறப்பு வரை வார்த்தைகள் மனிதனை சுற்றியே பயணிக்கின்றன. மனிதர்கள் த ான் வார்த்தைகளை விட்டு வெகு தூரத்தில் இருக்கிறார்கள் போலும். பல நேரங்களில் வார்த்தைகள் குறித்து யோசித்திருக்கிறேன். யாருக்கும் துரோகம் இழைத்தவனில்லையே நான் என எனக்குள்ளாகவே யோசித்திருக்கிறேன். ஆனால், வார்த்தைகள் என்னை சுற்றி வந்தவன்னமே இருக்கின்றன. கால இடைவெளியில் சில வார்த்தைகள் மறைந்து போகின்றன. சில மறக்கப்படுகின்றன. ஆனாலும், வார்த்தைகள் ஆகாய நிலவைப் போல.., மீண்டும் மீண்டும் எழுந்து பயணித்துக்கொண்டேயிருக்கின்றன. காற்றெங்கும் வியாபித்திருக்கும் வார்த்தைகளால் நெட்வொர்க் ஜாம் ஆகுமோ என்றொ...