பேய்மழை

பின்னிரவில் விழித்திருந்து

பிடரி மயிரலைய சொறிந்து

கண்ணிரண்டாய் திரளும்  க(பெ)ற்றோரை

காக்கும் திறன் கேட்டேன் அம்மே


விண்ணதிர வந்திறங்கி

வீதி தெருவெல்லாம் குலுங்க சிரித்து

பன்னிரண்டைப் பாடி

பரவசம் தந்தாயே....


முக்கனியா.. முத்தமிழா..

மூப்பர் சொல்லேடா..

மூதூர் கதையா என்றறியோம்

செப்பனிட வந்தேன் சீர்தூக்கி பார்ப்பாயோ...


செந்நதியா... செண்பகமா...

சேர்ந்தாடும் வஞ்சம்;

வெண்பனியா... வானுயர்ந்து

வீழ்த்திடுமோ எனை பேய்மழை.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொம்மலாட்டம்

ஆட்டோ சங்கர்

ஊசியிலைக் காடுகள்