வார்த்தைகள்
வார்த்தைகள் அற்புதமானவை, அழகானவை, ஆக்ரோஷமானவை, எளிமையானவை, இன்னும் என்னென்னவோ இப்படி வார்த்தைகளை சொல்லிக்கொண்டிருக்கலாம் நாம். ஏனெனில் வார்த்தைகள் வலிமையானவை என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
வார்த்தைகள் தான் எல்லாவற்றையும் செய்கின்றன. வார்த்தையின் ஜீவனை பொறுத்து அதன் அழகியலும், தேய்மானங்களும் அமைகின்றன. பகலிரவு ஆட்டங்களைப் போல வார்த்தைகள் மாறி மாறி பிறந்து கொண்டேயிருக்கின்றன அதன் இயல்பில்.
பிறப்பில் இருந்து இறப்பு வரை வார்த்தைகள் மனிதனை சுற்றியே பயணிக்கின்றன. மனிதர்கள் தான் வார்த்தைகளை விட்டு வெகு தூரத்தில் இருக்கிறார்கள் போலும். பல நேரங்களில் வார்த்தைகள் குறித்து யோசித்திருக்கிறேன். யாருக்கும் துரோகம் இழைத்தவனில்லையே நான் என எனக்குள்ளாகவே யோசித்திருக்கிறேன். ஆனால், வார்த்தைகள் என்னை சுற்றி வந்தவன்னமே இருக்கின்றன.
கால
இடைவெளியில் சில வார்த்தைகள் மறைந்து போகின்றன. சில மறக்கப்படுகின்றன.
ஆனாலும், வார்த்தைகள் ஆகாய நிலவைப் போல.., மீண்டும் மீண்டும் எழுந்து
பயணித்துக்கொண்டேயிருக்கின்றன.
காற்றெங்கும் வியாபித்திருக்கும் வார்த்தைகளால் நெட்வொர்க் ஜாம் ஆகுமோ என்றொரு சந்தேகம் வேறு எனக்கு. வாத்தைகள் எங்கிருந்து பிறக்கின்றன. அதுசரி, அவை எங்குதான் போய் சேர்கின்றன. ஆனால் எதையேனும் செய்துகொண்டேயிருக்கின்றன வார்த்தைகள்.
வார்த்தைகள் ஓரெழுத்தில் இருக்கலாம்... அல்லது ஓராயிரம் எழுத்துக்களை சுமந்ததாயும் இருக்கலாம். பல நேரங்களில் வார்த்தைகளுக்கு மொழியிருப்பதில்லை. அது மெளனமாகவோ, சிறு பார்வையாகவோ கூட இருந்துவிடுகிறது. ஆனால் வார்த்தைகள் வீரியம் மிகுந்தவை என்பதை உணர்ந்திருக்கிறேன்.
சாமான்யர்கள் முதல் சக்திமான்கள் வரை வார்த்தைகளின் வடிவங்களுக்கு கட்டுப்படும் வித்தை கடவுள்களுக்கு மட்டும் விதிவிலக்கா என்ன? சில வார்த்தைகள் கம்பீரமானவையாக, கட்டுக்குள் வைக்கும் மந்திரமாக, பெட்டிக்குள் உறங்கும் பாம்பாக, விஷமாக, அமிர்தமாக வார்த்தைகள் எல்லா உருவங்களிலும் மறைந்திருக்கின்றன.
மனிதர்கள் வார்த்தைகளின் பயன்பாட்டை உணர்ந்திருப்பதாக எனக்கு தோன்றவில்லை. வார்த்தைகள் குறித்தும் அதன் வீச்சு குறித்தும் யாரும் யோசிப்பதாகவும் இல்லை. வார்த்தைகள் எப்போதும் உயிர்ப்புடன் இருக்கின்றன. ஆகையால் தான் வார்த்தைகளை நாம் பேசி வீணடடித்துக் கொண்டிருக்கிறோம்.
ஒரு மாற்றுக்கு வார்த்தைகள் நம்மை பற்றி பேசுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டியிருக்கிறது உலகத்தில் யாரேனும் சொல்லுங்களேன் .?
காற்றெங்கும் வியாபித்திருக்கும் வார்த்தைகளால் நெட்வொர்க் ஜாம் ஆகுமோ என்றொரு சந்தேகம் வேறு எனக்கு. வாத்தைகள் எங்கிருந்து பிறக்கின்றன. அதுசரி, அவை எங்குதான் போய் சேர்கின்றன. ஆனால் எதையேனும் செய்துகொண்டேயிருக்கின்றன வார்த்தைகள்.
வார்த்தைகள் ஓரெழுத்தில் இருக்கலாம்... அல்லது ஓராயிரம் எழுத்துக்களை சுமந்ததாயும் இருக்கலாம். பல நேரங்களில் வார்த்தைகளுக்கு மொழியிருப்பதில்லை. அது மெளனமாகவோ, சிறு பார்வையாகவோ கூட இருந்துவிடுகிறது. ஆனால் வார்த்தைகள் வீரியம் மிகுந்தவை என்பதை உணர்ந்திருக்கிறேன்.
சாமான்யர்கள் முதல் சக்திமான்கள் வரை வார்த்தைகளின் வடிவங்களுக்கு கட்டுப்படும் வித்தை கடவுள்களுக்கு மட்டும் விதிவிலக்கா என்ன? சில வார்த்தைகள் கம்பீரமானவையாக, கட்டுக்குள் வைக்கும் மந்திரமாக, பெட்டிக்குள் உறங்கும் பாம்பாக, விஷமாக, அமிர்தமாக வார்த்தைகள் எல்லா உருவங்களிலும் மறைந்திருக்கின்றன.
மனிதர்கள் வார்த்தைகளின் பயன்பாட்டை உணர்ந்திருப்பதாக எனக்கு தோன்றவில்லை. வார்த்தைகள் குறித்தும் அதன் வீச்சு குறித்தும் யாரும் யோசிப்பதாகவும் இல்லை. வார்த்தைகள் எப்போதும் உயிர்ப்புடன் இருக்கின்றன. ஆகையால் தான் வார்த்தைகளை நாம் பேசி வீணடடித்துக் கொண்டிருக்கிறோம்.
ஒரு மாற்றுக்கு வார்த்தைகள் நம்மை பற்றி பேசுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டியிருக்கிறது உலகத்தில் யாரேனும் சொல்லுங்களேன் .?
கருத்துகள்
கருத்துரையிடுக