இடுகைகள்

மார்ச், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இதற்கா மனிதனுக்கு ஆறாம் அறிவு

இருபது வருசமா சோறு போட்டு, பாசங்காட்டி.. பாதுகாத்து, நல்லது கெட்டது செஞ்சி, ஆசப்பட்டத வாங்கி குடுத்து புள்ளைய பெத்தவன் பத்தரமா வளப்பான். எங்கிருந்தோ வாரவன் காதல் பண்ணி தூக்கிட்டு போய்டுவாரா? ஒன் வீட்டுப் பொண்ணு காதலிச்சா ஏத்துக்க முடியுமா? உன்னால முடியுமா? எனக்கு அழுகைதான் உண்மையில் வந்தது. ஆனால், சிரித்தேன் அப்போது... அவர்கள் தொடர்ந்தார்கள். எவ்ளோ திமிரு இருக்கனும். பெத்தவங்கள நெனச்சி பாருங்க. எவ்ளோ கஷ்ட பட்டுருப்பாங்க. அதான், ரோட்ல ஓட ஓட வுட்டு போட்டானுங்க. எங்கள பொருத்த வரைக்கும் கொலை செஞ்சது சரிதான். கட்டுப்பாடு கெளரவம்லாம் என்னாறது? பெத்தவங்கள கஷ்ட படுத்திட்டு திருமணம் செய்யக்கூடாதுங்றதுல ஞாயம் இருக்கு, அதுக்காக கொலை செய்யறது சரியா?  ன்னு கேட்டேன். என்னங்க புரியாம பேசிட்ருக்கீங்க. ஒவ்வொரு சாதிக்கும் ஒரு கட்டுப்பாடு இருக்கு. சரி நீங்க சொல்றபடியே வச்சுப்போம். எல்லோரும் பொது கம்யூனிட்டிக்கு வாங்க. நீங்க சொல்ற மாதிரி காதல ஏத்துப்போம். அரசாங்க ஒதவி வாங்க ஒங்களுக்கு சாதி வேணும். கல்யாணம்னா கசக்குதா?  இப்பவும் சொல்றோம், நாங்க காதல எதுக்குல. அவங்கவுங்க அவங்க சாதிக்குள்ளய...

சாதி இல்லாத வானம்

ஆசை ஆசையாய்... வாழுகிற எண்ணத்தோடு காதல் திருமணமாகி மனதுக்கு பிடித்தவனோடு வாழ்க்கையை அனுபவிக்கும் தருணத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் உள்ளம் பதை பதைக்கும் கொடூரத்தை நிகழ்த்தி விடுகிறார்கள் ஆணவக்காரர்கள். காதல் பறவைகள் இனிமை ததும்ப புண்ணகைக்கும் வெளிகளில் எங்கிருந்தோ விரியன்கள் வெளிப்பட்டு விஷம் கக்கிவிடுகின்ற மனசாட்சியற்ற மனிதர்களை சுமந்து கொண்டிருக்கும் பூமி அழியத்தான் வேண்டுமென தோன்றுகிறது.                     முருகேசன், இளவரசன், கோகுள்ராஜ், சங்கர் இதெல்லாம் வாழும் ஆசையில் அலைந்து கொண்டிருக்கும் ஆத்மாக்களின் உடல்கள். வாழ வேண்டிய வயதில் வரலாற்றின் எடுத்துக்காட்டுகளுக்காக உரமிடப்பட்ட விதைகள். வாழ்வதற்கே உரிமையில்லாத போது எப்படி காதலித்து திருமணம் புரிந்து, பெற்றவர்களின் முன்பு சந்தோஷமாக வாழலாம்? அது எத்தனை பெரிய தவறு. அதற்கு என்ன செய்யலாம்..? கொலையை தவிர. ஆணவக் கொலை செய்வது புனிதம் அதனால் அதையே செய்யலாம். அண்ணனே தங்கையை வெட்டலாம். தந்தையே மகளை நிர்வாணம் ஆக்கி ஓடவிட்டு பழி தீர்க்கலாம். உறவுக்காரர்களே விஷம் கொடுக்கும் பாக்கியத்தை ஏற...

ஆத்திரம் தீர அடித்தும்

படம்
அப்பனுக்கு முடியல... ஆத்தாளுக்கு சொகமில்ல... தம்பிய பாம்பு கடிச்சிருச்சாம்... அண்ணனுக்கு மாரடைப்பு ... புருசன்காரன் போயிட்டானே... புள்ளைக்கு என்னாச்சோ... இப்படி, பதறி தவித்து வரும் ஆயிரம் அழுகைகளை ஒவ்வொரு நாளும் பேருந்தில் பார்த்திருக்கிறோம் பெண்களிடம். யாரென்றே தெரியாதவர்களிடம் எல்லாம் சொல்லி அழுவதில் ஒரு ஆறுதல் கிடைத்து விடுகிறது அவர்களுக்கு.  ஆனால் இப்போதெல்லாம் அப்படியல்ல என தோன்றுகிறது. பேருந்து பயணமே பெண்களை பொருத்தவரை ஒரு தனித்துவமான புரிதலோடுதான் இருக்கும் போல, அவர்களை பொருத்தவரை அது நம்பிக்கை அற்றது. நம்மை சுற்றி யார் இருக்கிறார்கள் என்கிற தெளிவற்றது. நல்லவனா, கெட்டவனா, திருடனா, கொலைகாரனா.. இப்படி நிறைய. டிக்கெட்டின் சாக்கில் உரசலை தந்து காமுற செய்கிறவர்கள் அருகிலிருக்கிறார்கள் என்கிற சந்தேகத்தோடே எப்போதும் பயணிக்கிறார்கள் போலும் பெண்கள். உண்மைதான், எவனோ ஒருவனின் கை செய்த வேலையால் பேருந்து பயணத்தில் கூட்டத்தின் நடுவே ஒற்றை பெண் அழுததை பார்த்தபோது வெட்கம் பிடுங்கி தின்றது எங்களை. பயணங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு காரணத்தை வைத்திருக்கிறது. பெண்கள்...

வேணும்ங்கறதுக்காக ஓடி ஓடி வர்ரீங்க...

படம்
அந்த வார்த்தை ஒரு அர்த்தம் பொதிந்ததாய் இருந்தது. அமைதியான நீரின் தடத்தில் வீசப்பட்ட கல் போல அந்த வார்த்தை மெளனத்தை தின்று செரிக்கும் முரட்டு வன்மத்தை போகிற போக்கில் பேசிய போது அவனால் சும்மாயிருக்க முடியவில்லை. தேவையை தீர்த்துக் கொள்வதற்காக மட்டுமே தங்களை பயன் படுத்துகிறவர்களை பார்த்து கேட்கிற கேள்வி அது. தேவை தீர்ந்ததும் தூக்கி எறிந்துவிட்டு போனவர்களை பார்த்து துப்புகிற எச்சில் அது. எதற்காக என் காதில் படும்படி... என யோசித்து கிடக்கிற நாழிகை எங்கும் உச்சி நகர்ந்து வெப்பம் மேற்கு நோக்கி சரிந்துவிட்டிருந்தது. இரவின் நேரமெங்கும் அவனோடவே ஒட்டிக்கொண்டிருக்கிறது அந்த வார்த்தை. தூக்கமில்லாமல் புரண்டது இரவு. ஏன் அப்படி கேட்டாள்...... எங்கள் தேவை என்ன என்றே தெரியாமல் இருக்கும் போது, எங்களுக்குள் தீர்ந்து போக என்ன இருக்க முடியும்? நெருக்கம் உடைகிற போது வெளிப்படும் வார்த்தை பிரயோகிக்க பட்டதை பார்த்து நடுங்கி கிடக்கிறது உள்ளம் அவனுக்கு. ஊருக்கு போனவளை விசாரிக்காமல் இருக்கிறேனே.... ஒருவேளை நான் ஏன் அவள் மீது இப்படி அக்கறை இல்லாமல் இருக்கிறேன் என என்னை பார்த்து உரிமையோடு கேட்கிற கேள்வ...

கடவுள் ஃபோன் பேசினார்

படம்
அதிசயம் நடக்குமென்று படித்திருக்கிறேன். அது நடந்து உணர்ந்து அநுபவிப்பதுஇப்போதுதான் முதல் முறை என நினைக்கிறேன்.  அவரை சந்தித்து 2 மாதம் கடந்து விட்டது. புதிய நிறுவனத்துக்கு மாறி, புதிய வீட்டுக்கு வந்த பிறகு, இந்த 2 மாதத்தில் பணத்தேவை 10 சதவீதத்திற்கு அதிகரித்திருக்கிறது. எனவே, கடனில் நகர ஆரம்பித்து விட்டது என் வாழ்க்கை என புரிந்திருக்குமென்று நினைக்கிறேன். 20,000 சம்பளத்தை கடந்த பிறகும் அம்மாவிடம் இதுவரை  ஒரு 10,000 ரூபாயை முழுமையாக  கொடுத்ததில்லை நான். இதுகுறித்து தூக்கம் களைந்து எழுந்து நேற்றெல்லாம் பல விதமாக கணக்கு போட்டு பார்த்து விட்டேன். இந்த மாதம் வரவு 18,500 என்றால் செலவு 19,540 ஆக இருக்கிறது. கண்களை மறைக்க ஆரம்பித்து விடுகிறது பசி. கடையில் சாப்பிட்டு கட்டுப்படி ஆகவில்லை. மாதத்  தவனையில் போன் வாங்கியது தோழிக்கு பிடிக்கவில்லை என பலமுறை என்னிடம் சொல்லி விட்டாள்.  48,000 ரூபாய்க்கு போன் வாங்கினால் எவள் தான் சும்மா இருப்பாள். நம்மீது தனிப்பட்ட அக்கறையுள்ளவள் ஏதோ கோபப்படுகிறாள் என நினைத்து கொள்ளலாம். ஆனால், அப்பா... ஆம், அப்பாவுக்கு தெரிந்தால் பாவம...