இடுகைகள்

ஆகஸ்ட், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உலகம் ஒரு நாடக மேடை

படம்
  2013 ல் மட்டும்  நினைப்பது நடந்துவிடவா போகிறது.  பூக்களுக்கு ஆசைப்பட்டு வேர்களுக்கு விஷம் ஊற்றும் முட்டாள்களின் தேசம் இது. கல்வி கற்ற ஒழுக்கமுள்ள நாகரிக முட்டாள்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் உலகின் முடுக்குகள் எங்கும். உயிர்களின் மதிப்பறியாது வாழும் நவீன கற்கால மனிதர்கள். காதலுக்கும் காமத்துக்கும் அர்த்தம் தெரியாத அரைவேக்காடுகள்... சோற்றுக்கு பதில் எதை தின்றார்களோ சாதியும் மதமும் தான் வேண்டுமென்கிறார்கள். பெரியார்களும் அம்பேத்கார்களும் பிறந்து பிறந்து சலிப்படைந்து இனி பிறக்காத ஒரு அவதாரம்தான் எடுப்பார்கள் போல. யோனியை கிழித்துக்கொண்டு வரும்போது இரத்தத்தோடு சேர்ந்தே வந்ததா சாதி? அசிங்கமான வார்த்தைகளை தேடித் தேடிப் பார்க்கிறேன் என்னை நானே சபித்துகொள்ள. அசதியில் உறங்கிப்போன நினைவுகளை  இன்னமும் கேட்டுகொண்டிருகிறேன். கிழிந்த ரூபாய் நோட்டுக்கள் தரும் மரியாதையை எந்த பட்டு சட்டையும் எங்களுக்கு தருவதேயில்லையே ஏன்? அரசுக்கும் அரசுக்கும் இடையே ஆண்டாண்டுகால யுத்தம். நீர் கேட்டு நீர் கேட்டு மாய்ந்து நிலமெல்லாம் விவசாயி ரத்தம். எச்...

தேசத்தின் அடையாளம்

படம்
  ஒரு தேசத்தின் அடையாளம் என்றால்   அது   அந்த தேசத்தின் உயர்வுக்காக   பாடுபட்டவர்களைத்தான் நெஞ்சம்   பெரும்பாலும்   நம் நினைவுக்கு கொண்டு வரும் . அப்படி தெற்காசிய பிராந்தியத்தில்   இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவர்தான் விக்ரம் சாராபாய் .     1919 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் நாள் ஒரு பெரும் செல்வந்தரின் குடும்பத்தில் பிறந்த விக்ரம் சாராபாய் தன்னுடைய பள்ளி கல்வியை தாயார் நடத்திய பள்ளியிலும் இளவயது கல்வியை குஜராத் கல்லூரியிலும் கற்று முடித்தார் .   பணம் படைத்தவர்களின் பிள்ளைகள் கௌரவத்துக்காக ஆங்கில பிரதேசங்களை தேடி கல்வி கற்றுகொண்டிருந்த சமயத்தில் இயற்கை அறிவியலின் மீதிருந்த ஆர்வத்தால் 1939 ஆம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் தன்னை மாணவனாக பதிவு செய்து கொண்டார் .   பொருளாதாரமும் ஆங்கில அறிவும் சாராபாஇக்கு சாதகமாக இருந்தாலும் இரண்டாம் உலகப்போர் ஏற்படுத்திய இன்னல்கள் விக்ரமை இந்தியாவுக்கு கொண்டுவந்து சேர...

புத்தனும், அன்னை தெரசாவும்

படம்
சத்தியம் தொலைகாட்சி நிறுவனத்தின் தலையங்கத்தில் இது வெளி வந்திருக்கிறது. இருப்பினும் உங்களுக்காக இதை மறு பதிவு செய்கிறேன்.    1988 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழக கிழக்கு கடற்கரையை ஒட்டிய திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் ஒன்றும் பெரிதாக சொல்லிக்கொள்ளும் படியான நகரமில்லை. ஆனால், உலக மக்களால் ஒவ்வொருநாளும் உச்சரிக்கப்படும் வார்த்தைகளில் இன்று கூடங்குளமும் ஒன்றாகிப் போனது. இங்குதான் தொழில்நுட்ப ரீதியில் மிகவும் திறனுள்ள அணுமின்சாரம் தயாரிக்கும் அணுஉலைகளை இந்திய அரசு நிறுவி வருகிறது. ஆதரவான அரசுக்கும் எதிர்க்கும் சாதாரண மக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம்தான் கூடம்குளத்தை நோக்கி உலகை திரும்ப செய்திருக்கிறது. இன்றைய உலக தேவையில் நீருக்கு அடுத்தபடியாக மின்சாரம் என்றால் அது மிகையில்லை. உலக நாடுகள் பொருளாதார ரீதியிலான வளர்ச்சியைத்தான் வல்லரசு ஆவதற்கான முதல் காரணமாக கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஒரு நாட்டின் வளர்ச்சி விகிதத்தை மின்சாரமும் தீர்மானிக்கிறது என்றால் அதில் சிறிதளவும் ஐயமில்லை. ஆனால், அ...

இந்த பழம் புளிக்கும்

படம்
நண்பா, "இந்த பழம் புளிக்கும் என்று சொல். நீ ரசித்து ருசித்து அனுபவித்து சாப்பிட்டதை கசக்கும் என்று சொல்லாதே"! காதலின் பேரால் கண்ட இடங்களில் சுற்றி திரிந்துவிட்டு திருமண நாள் வந்ததும் பொருளாதார நோக்கத்தோடு சிந்திக்கின்ற உங்களைப் போன்ற நண்பர்களை எண்ணுகையில் நான் மேலானவன் என்றே நினைக்கிறேன்.நாம் விரும்பியோ விரும்பாமலோ சில நேரம் வந்துவிடுகிறது காதல். யாருக்கு தெரியும் அது எப்போது முளைக்கிறது என்று? இனம் மொழி பேதம் கடந்துதான் பிறக்கிறது காதல். பேசாமலே இருக்கும் போதும் பிடிக்க செய்கிறது மனதுக்குள். ஊர் சுற்றுகிறோம். கைகளை கோர்த்தபடி மெய் மறந்து ஒன்றாக மணல் பரப்பில் நடக்கிறோம். கடிதங்களிலும் செல்போன் காற்றலைகளிலும் காதல் குழந்தையை வளர்க்கிறோம். முத்தங்களை பரிமாறிக்கொள்கிறோம். முடிவில் நம்மையே இழந்தும் போகிறோம். யாருக்கு தெரியும் அது எப்போது பிறக்கிறதென்று? உன் சிந்தனை ஹார்மோன்கள் சுரக்க சுரக்க போதை பிறக்க ஆரம்பித்துவிடுகிறது உனக்கு...அவளுக்கும்தான். நேரம் கடந்து விழிப்பு வரும். நேரம் பார்க்காமலேயே கனவு வரும். நேற்று மறைமுகமாய் சொல்லி விட்டுப்போன வ...

குருகுலம்

படம்
அம்மாவிடமோ அப்பாவிடமோ இதுபற்றி நான் சொல்லிக் கொள்ள வேயில்லை.  யாரிடம் இதுபற்றி பேசுவது என்பதில் கூட எனக்கு சிக்கல் இருந்தது. அண்ணனிடம் கேட்டால் போடா போய் வேலையை பாரு என்று அடிக்க வருவான். நான் ஏன் மற்றவர்களிடம் இது பற்றி கேட்டு உதை வாங்க வேண்டும்? எனக்குள்ளாகவே கேட்டுக்கொள்வதோடு சரி...மற்றபடி அதை அப்படியே மறைக்கக் முயற்சித்தேன். அனாலும், உள்ளுக்குள் கிடந்த ஆசை உருண்டை கண்ட இடத்திற்கும் உருண்டு என்னை துவம்சம் செய்து கொண்டிருந்தது. உறக்கமும் நேரத்தில் வந்து தொலைய மறுத்தது. அப்போதெல்லாம், எனது கிராமத்தின் மேற்கு பகுதியில், விழுதுகள் படரும் ஆலங்குலக்கரை பக்கம் வேலு கடையில் மிட்டாய் வாங்கிய எனது நண்பர்களோடு அந்திம நேரத்தில் ஒன்று கூடி பேச்சு வார்த்தை நடத்தும் சமயங்களில் இப்படி எதிர்கால திட்டம் பற்றி ஆளுக்கொரு கருத்தை முன்வைப்பதும் அதை கிண்டலடிப்பதும் நடக்கும். மிட்டாய் சப்பி சிவந்து போன நாக்கோடு நான் கிண்டலடிக்கப்பட்ட பெரும்பாலான இரவுகளில் சரியாக சாப்பிட தோணுவதில்லை எனக்கு. மனம் முழுவதுமாக அந்த வார்த்தைகள் வந்து என்னை அலைகழித்துப் போடும். எப்படியாகிலும் சொல்வதை...