இடுகைகள்

பிப்ரவரி, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உலக நீர் நாள்

படம்
ஐக்கிய நாடுகள் அவையின் வேண்டுகோளுக்கிணங்க ஆண்டு தோறும் மார்ச் 22 ஆம் நாள் உலக நீர் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது . உலகின் உய ிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத நீர்   மனிதர்களால் பயன்படுத்தப்படுகின்றது.     நீர் அடிப்படை மனித தேவை , எனினும் நீர் பற்றாக்குறையால்      சமீப காலமாக நீர் வணிக மயமாக்கப்பட்டு விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.    நிலத்திலிருந்து பெறும் நீரில் 97% உப்பு நீராகவே உள்ளது. 3% மட்டுமே குடிநீராக இருக்கின்றது .   அதிலும் மூன்றில் இருபங்குகளுக்கும் சிறி து அதிகமாக பனிப ் பாறைகளில் மற்றும் துருவப்பனி களில் மிஞ்சியுள்ள உறையாத சுத்தநீர்தான் நிலத்தடி நீராகக் கண்டெடுக்கப் படுகின்றது.  உலகின் நீர் ஆதார ம் படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகின்றது. உலக மக்கள் தொகை தொடர்ந்து அதிகரிக்க அதிகரிக்க , நீரின் தேவையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது .   உலக மக்கள் தொகையில் 40 விழுக்காடு நாடுகளிலும்   பிரதேசங்களிலும் நீர் பற்றாக் குறை கடுமையாகியுள்ளது.  ஐ.நா வெளியிட்ட புள்ளிவ...

வாடகைப் புத்தக நிலையம்

படம்
கட்டுரை சந்திரபால் - ஆம்ஸ்ட்ராங்   வாடகைப் புத்தக நிலையம். வாசகர்களுக்குப் பயனுள்ள வகையில் குறிப்பிட்ட தொகையை வாடகையாகப் பெற்றுக்கொண்டு இயங்கும் புத்தக வாசிப்பின் புகலிடம் ஆகும். தேவையான புத்தகங்களை தேர்ந்தெடுத்து படிக்கவும் படித்த பின்பு திரும்பப் பெற்றுக் கொள்ளும் ஒரு எளிய வர்த்தக முறையை வாடகைப் புத்தக நிலையங்கள் செய்து வருகின்றன. என்னதான் வாசகரின் விருப்பபடி புத்தக நிலையங்கள் மூலம் புத்தகங்களை எளிதாக தேடி படிக்கும் வாயப்புகள் அமைந்திருந்தாலும் , தேடிக் கிடைக்காத புத்தகங்களும் , அதிக விலையுள்ள புத்தகங்களும் ,   வாசகர்களிடம் எளிதாக சென்றடைய ஆரம்பிக்கப் பட்ட வாடகைப் புத்தக நிலையங்களைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பது புத்தக வாசிப்பாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் ஏற்பட்ட ஊடகங்களின் ஆதிக்கம் , நடைமுறையில் புத்தக வாசிப்பை வெகுவாகக் குறைத்துள்ளது. இணையங்கள் போன்றவற்றின் மூலம் இன்றைய வாசிப்பின் தளம் மாறியிருப்பதால் , புத்தகம் வாசிக்கும் தன்மை மக்களிடையே வேறுபட்டிருப்பதை நம்மால் உணரவும் முடிகிறது. Blog என...

ஊசியிலைக் காடுகள்

படம்
                                                                                                தமிழில் வனம், கானகம், அடவி, புறவு, பொதும்பு  என  பல சொற்களால் அழைக்கப்படுவது காடு. சுருக்கமாக சொன்னால் மரங்களின் அடர்த்தி அதிகம் உள்ள நிலப் பரப்பே காடு என்றால் அது மிகையில்லை . உயிர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்பவை காடுகள் தான். அந்த வகையில் ஒவ்வொரு மனிதனாலும் கவனிக்க படவேண்டிய ஒன்றாக இருக்கின்றன  காடுகள். முற்காலத்தில் புவியின் மேற்பரப்பில் 50%  சூழப்பட்டிருந்த காடுகள் தற்போது  வெறும்  ...

பாரிஸின் மாசிலான்சாவடி!

படம்
                                    கட்டுரை : ஆம்ஸ்ட்ராங் (குறும்பட இயக்குனர் )     வளர்ப்பு பிராணிகளின் அணிவகுப்பு....  விலங்குகளின் விற்பனை தளம்... பாசப் பறவைகளின் வியாபார திருவிழா   என ஒவ்வொரு ஞாயிறு அன்றும் குதூகலமாகிறது பாரிஸின் மாசிலான்சாவடி .                                       சென்னையில் பல்லாவரத்தை  போல மிகப்பெரிய  வளர்ப்பு பிராணி களின் சந்தையாக உருவெடுத்து வருகிறது  பாரிஸின் மாசிலான்சாவடி   சந்தை.  வீட்டில் செல்லமாக வளர்க்க விரும்பும் பிராணிகளான கோழி வகைகள், புறா, முயல், நாய், வாத்து, வெள்ளை  எலி, பேன்சி பறவைகள் மற்றும் வண்ண வண்ண மீன் போன்றவைகள் அணிவகுத்து நிற்கும் ...

கடிகாரம்

படம்
கட்டுரை ஆம்ஸ்ட்ராங் ( குறும்பட இயக்குனர் )  நேரத்தை அறிவதற்கான கருவியே கடிகாரம். கடிகாரத்திற்கு மணிக்கூடு என்றொரு பெயரும் உண்டு. கையின்  மணிக்கட்டில் கட்டப்படுவதால் கைக்கடிகாரம் என்று அழைப்பர். கடிகாரத்தின் கதை மிகவும் பெரியது, சுவாரசியமானதும் கூட. நாகரிக முதிர்ச்சியின் ஒரு கட்டமாக நேரத்தை அளவிடும் முறை மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டது. 14ஆம் நூற்றாண்டில்தான் கடிகாரம் (clock) என்ற வார்த்தை உபயோகத்திற்கு வந்தது. இது "க்ளோக்கா" என்ற லத்தீன் மொழியிலிருந்து எடுக்கப்பட்ட சொல்லாகும். மிகவும் பழங்காலத்தில் சூரியன் விழும் இயக்கத்தையும், அதன் விளைவாக நிகழும் நிழல்களின் நகர்வையும் அடிப்படையாகக் கொண்டு தான் நேரம் கணக்கிடப்பட்டு வந்தது. வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே சுமேரியர்கள் நேரத்தை அளவிட முயன்றதாகவும், இதில் முன்னோடிகளாக விளங்கியவர்கள் அவர்களே என்றும் கருதப்படுகிறது. சுமேரிய நாகரிகமே ஒரு ஆண்டை மாதங்களாகவும், மாதத்தை நாட்களாகவும், ஒரு நாளைப் பல கூறுகளாகவும் பிரித்தது என்று ஒரு கூற்று நிலவி வருகிறது. காலப்போக்கில்  அரேபியர்கள் தமது சொந...

பொம்மலாட்டம்

படம்
கட்டுரை   சகோதரி சிந்துமதி (நிகழ்ச்சி தயாரிப்பாளர் - சத்தியம் தொலைகாட்சி) கலைகளின் தாயகமாய் திகழ்வது தமிழ்நாடு. அப்படி கலாசாரத்திலும், மரபிலும் முன்னோடியாக திகழும் தமிழக த் திற்கு என்று எப்போதுமே ஒரு தனி அடையாளம் உண்டு. அந்த அடையாளங்களில் ஒன்றுதான் பொம்மலாட்டம்.  மனித நாகரிகத்தின் வளர்ச்சியில் காலம் காலமாய் தொடந்துவரும் பொம்மலாட்டத்திற்கு என்றே ஒரு தனிச்சிறப்பு உண்டு. உலகில் இன்று பல்வேறு நாடுகளில் , பல்வேறு பெயர்களில் பொம்மலாட்ட த் தை கண்டுகளித்து வருகிறார்கள். இருப்பினும் நாகரிகத்தின் பெயரால் நலிவடைந்து கொண்டிருக்கும் கலையான பொம்மலாட்டத்தின் வரலாறுதான் என்ன? '' சீனர்களுக்கும் நமக்கும் எல்லைத் தகராறு மட்டும் அல்ல.... கலைத் தகராறும் தான். ' நாங்கதான் பொம்மலாட்டத்தைக் கண்டுபிடிச்சோம் ’ என்கிறார்கள் சீனர்கள். ஆனால் , சிலப்பதிகாரத்திலேயே பொம்மலாட்டம் பற்றிய குறிப்புகள் உள்ளது. இது சும்மார், 300 வருடங்கள் பழமையானது. இன்றைய அனிமேஷன் படங்களுக்கு, பொம்மலாட்டம் ஒரு  முன்னோடி என்று சொல்லலாம். கதாபாத்திரங்கள் பேசுவது , காதலிப்பது , சண்டை இடுவது எல்லாம் ...

புற்றுநோய் என்னும் அரக்கன்

படம்
உலகில் உள்ள மனிதர்கள் நோய் நொடியின்றி மன நிறைவோடும் அமைதியான முறையிலும் வாழவேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். ஆனால், இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தாற்போல பல திடுக்கிடும் நிகழ்வுகளும் செய்திகளும் ஒவ்வொருநாளும் நம்மை வந்தடைந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி,  அனுதினமும் மனிதவர்க்கம் சந்திக்கும் கொடிய நோய்களில் ஒன்று கேன்சர் என்றழைக்கப்படும் புற்றுநோய். புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தை நாம் இன்னும் ஆரம்பிக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. வருடத்துக்கு மில்லியனுக்கு அதிகமானோர் புற்றுநோயின் தாக்கத்தால் பாதிக்கப்படுகின்றனர். இந்த அதிர்ச்சி தகவலை சகாதார நிறுவனமே உறுதிபடுத்தியிருக்கிறது. 2020 ஆம் ஆண்டுகளுக்குள்ளாக இதன் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் உயிரிழப்புகள வருடத்திற்கு 2 மில்லியன் அதிகரிக்கலாம் என்றும் அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவிக்கிறார்கள். புற்று நோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் 30% புகையிலை பயன்பாட்டினாலேயே ஏற்ப்படுகின்றது என்றும் குறிப்பாக இளைய சமுதாயத்திடம் அதிக எண்ணிக்கையில் பரவியிருப்பதும் தெரிய வந்துள்ளது. 4000 க்கும் அதிகமான பக்க விளைவுகளை ஏற்ப்படுத்தும் ...