இடுகைகள்

2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மது - பழங்குடிகளின் எடுத்துக்காட்டு

படம்
மக்களின் வரிப்பணத்தில் பல கோடி ரூபாயை கடனாக பெற்றவர்கள் எல்லாம், அதனை கட்ட முடியாமல் வெளி நாடுகளுக்கு தப்பிச் சென்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் நம் தேசத்தில் தான், பசிக்காக ஒரு மனிதன் அரிசி திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு கிராம மக்களால் அடித்து படுகொலை செய்யப்படுகிறார். உணவுக்காக ஒரு மனிதன் கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் இணையதளங்களில் வெளியாகி தேசத்தையே உலுக்கி எடுத்ததென்றால் அதனை வெகு சாதாரண ஒன்றாக நாம் கருதிவிட முடியாது. கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள கடுகுமன்னா வனப்பகுதியில் நடைபெற்ற, இந்த சம்பவம், தொடர்பான தகவல்கள் உலகின் கண்களுக்கு தெரிய வர மேலும் இரண்டு தினங்கள் ஆனது என்றால் அங்குதான் நம் மனங்களில் வீற்றிருக்கும் ஏகாதிபத்திய சிந்தனையின் ஆணவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சக மனிதனுக்காக துரோகத்தை, சக மனிதன் பட்ட வேதனையை பகிர்ந்துகொள்ளும் நம்முடைய அக்கறையில் விழுந்திருக்கும் ஓட்டையை எந்தவகையில் நாம் சரி செய்வது என்கிற கேள்வி நமக்கு முன்னே எழுந்திருக்கிறது. கேரள மாநிலம் அட்டப்பாடியை அடுத்த முக்காலி கிராமத்தைச் சேர்ந்த மல்ல...

ஆட்டோ சங்கர்

தமிழகத்தை உலுக்கிய எத்தனையோ கொலை, கொள்ளை, கடத்தல் , பாலியல் வன்கொடுமை  சம்பவங்களை கேட்டிருக்கிறோம்... சமீப காலங்களில் அதனை பார்க்கவும் செய்கிறோம்... நாகரீகம் நம்மை வாழ வைக்கும் என்கிற நம்பிக்கையில் தான் ஒவ்வொரு கணமும்  கண்டு பிடிப்புகளோடும்,  ஆக்கங்களோடும் புதிய உலகை நோக்கி  பயணித்து கொண்டிருக்கிறது மனிதர்களின் வாழ்க்கை. ஆனால், நம்முடைய  நல்மனதுக்குள் ஆசைகளும் வஞ்சமும் நுழைந்து... போட்டியும் பொறாமையும் வளர்ந்து சமூகத்தில் நம்முடைய நிலையை மோசமான ஒரு பதிவாகவே   விட்டு செல்கிறது. அதற்கெல்லாம் காரணமாக அமைந்து விடுகிறது பேராசை.  இந்த சம்பவங்களின் பின்னணியில் ஒரு எடுத்து காடடாக 20ம் நூற்றாண்டில் ஒரு நபரை குறிப்பிட்டு சொல்ல முடியும் என்றால் ... சொகுசு வாழ்க்கைக்கும் சுகபோகத்துக்கும் ஆசைப்பட்டு கொலை கொள்ளை என களத்தில் இறங்கி அடித்து, சிறை கம்பிகளுக்கு  முன்னே தூக்கிலிட்டு கொல்லப்படட  ஆட்டோ சங்கரை தவிர வேறு யாரும் அத்தனை  பொருத்தமாய் இருக்க மாடடார்கள்....   தமிழகத்தின் தலைநகரத்தில் தொடங்கி தேசத்தை உலுக்கிய ஆட்டோ சங்கரின் வாழ்க்க...

ஹாசினி ஒரு உதாரணம்

படம்
குழந்தைகள் நம்முடைய செல்வம்.... குழந்தைகள் நம்முடைய எதிர்காலம்... குழந்தைகள் நம்முடைய அடையாளம்... குழந்தைகள் நம்முடைய அங்கீகாரம்... குழந்தைகள் நம்முடைய திருப்தி... குழந்தைகள் நம்முடைய பெருமை... குழந்தைகள் நம்முடைய பேரன்பு... குழந்தைகள் நம்முடைய பேரருள்... குழந்தைகள் நம்முடைய திசை... குழந்தைகள் நம்முடைய வழி... குழந்தைகளே நம்முடைய வாழ்க்கை... குழந்தைகளை நேசிப்போம் நண்பர்களே... பாலியல் சிந்தனைகளை குழந்தைகள் மீது திணிக்க முயலுவது மூடத்தனம். குழந்தைகளோடு நேரத்தை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். அப்பழுக்கற்ற.., கள்ளம் கபடமற்ற குழந்தை செல்வங்களை நல்ல எண்ணங்கள் நிறைந்த மனதோடு பாருங்கள்... அவர்களிடம் நல்லவிதமாக பேசுங்கள்.... தீய சிந்தனைகளோடு குழந்தைகளிடம் பழகுகிறவர்களுக்கு ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு கிடைத்த தண்டனைதான் பொருத்தமானது. அது இனி நடக்க வேண்டாமே குழந்தைகளை நேசிப்போம்....

பொங்கல் பண்டிகை அல்ல

படம்
பொங்கல் என்பது பண்டிகை அல்ல நண்பர்களே. அது நம்முடைய பாரம்பரியத்தை வெளிப்படுத்த மிச்சமிருக்கும் ஒரே திருவிழா. உழவின் தலைசிறந்த மக்களாகிய நாம் பொங்கல் விழாவை ஆண்டுதோறும் கொண்டாடி மகிழ்கிறோம். அதனை கொண்டாட வேண்டியது நம் கடமை. இந்து இஸ்லாம் கிருத்துவம் பெளத்தம் சீக்கியம் என மதம் கடந்து உலகின் மூத்த மொழியான தமிழின் தொன்மையை, உழவர்களின் மரபை உலகுக்கு வெளிக்காட்டும் ஒரே விழா பொங்கல் மட்டும் தான். இதனை உழவர்களின் வாரிசான நாம் கொண்டாடாமல் வேறு யார் கொண்டாடுவது? எல்லா ஆண்டுகளும் ஒரே மாதிரி அமைவதில்லை. ஓராண்டில் விவசாயம் தழைக்கலாம். ஓராண்டில் மழையால் அல்லது வெயிலால் பாதிப்படையலாம். ஆனால் விவசாயம் யார் கைகளில் இருக்கிறது? ... நம்முடைய கைகளில் தான் இருக்கிறது. அதை முன்னெடுக்கும் வேலையை செய்வது நம்முடைய கடமை.  உழவு குறித்து பேசாத தமிழ் இலக்கியங்கள் இல்லை. உழவு குறித்து பாடாத புலவர்களும் இல்லை. நம் பிள்ளைகளுக்கும் எதிர்கால சந்ததிக்கும் உழவின் அவசியத்தை உணர்த்த நாம் பொங்கல் விழா எடுக்க வேண்டும் நண்பர்களே. இயற்கையின் உன்னதத்தை அதன் மகத்துவத்தை ஒரு விழா மூலம் நம்முடைய பிள்ளைகளுக்கு கற்றுத்தர ப...