இடுகைகள்

ஜூன், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

யாருக்கும் தெரியாமலா நடக்கிறது கொலை?

படம்
எதற்காகவென்றெல்லாம் காரணம் சொல்ல தேவையில்லை  சமூகத்துக்கு ....... ஏதேனும் ஒருவகையில் சொட்டிக் கொண்டுதானிருக்கிறது  களத்தில் ரத்தம் ....... காதலா, சாதியா, மதமா, கடனா, சொத்து தகராறா என்பதை தேடுவதிலேயே பெரும்பாலும் கழிந்து விடுகிறது  காவல் தெய்வங்களின் பணி. கேள்வி எழுப்புகிற போதெல்லாம் கிழிந்த சட்டையை தைத்தே தப்பித்து கொள்கிறது கரிசன அரசு யாருக்கும் தெரியாமலா நடக்கிறது கொலை?

தவறென்று தெரிந்தும் செய்கிறோம்

படம்
தவறென்று தெரிந்தும் செய்கிறோம்... தவறை தவறாக  பார்க்காமல் பார்ப்பதால்... தவறென்று தெரிந்தும் செய்கிறோம்... சரியென்று சரியென்று சொல்லி சமாதானம் செய்யும் மனத்தை  செய்துவிடுகிறது செயல். ..  அதனால் தவறென்று தெரிந்தும் செய்கிறோம்...

சாதிவாடை

படம்
பழமைக்கும் புதுமைக்குமான போராட்டத்தில்       மனிதன் என்பதை மறந்து... ஒவ்வொரு நொடிகளிலும் - எங்கள்       உதிரத்தின் சொட்டுகளை       தடவி தடவி பார்த்தபடி  சிவப்பணுக்குள்ளே...       நீந்தி சிரிக்கிறது எங்களின் நாட்கள். வாழும் வெறிபிடித்து ஆட்டுவதால் நாங்கள்       மரணித்து கிடப்பதாய் நடிக்கிறோம். வண்ணங்கள் குழைத்து காதல் செய்தாலும்       கத்திமுனை பார்க்காமல் உறக்கமில்லை  எங்களுக்கு. ஆம்,  துரத்தியபடியே இருக்கிறது சாதிவாடை