இடுகைகள்

மார்ச், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மது - பழங்குடிகளின் எடுத்துக்காட்டு

படம்
மக்களின் வரிப்பணத்தில் பல கோடி ரூபாயை கடனாக பெற்றவர்கள் எல்லாம், அதனை கட்ட முடியாமல் வெளி நாடுகளுக்கு தப்பிச் சென்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் நம் தேசத்தில் தான், பசிக்காக ஒரு மனிதன் அரிசி திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு கிராம மக்களால் அடித்து படுகொலை செய்யப்படுகிறார். உணவுக்காக ஒரு மனிதன் கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் இணையதளங்களில் வெளியாகி தேசத்தையே உலுக்கி எடுத்ததென்றால் அதனை வெகு சாதாரண ஒன்றாக நாம் கருதிவிட முடியாது. கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள கடுகுமன்னா வனப்பகுதியில் நடைபெற்ற, இந்த சம்பவம், தொடர்பான தகவல்கள் உலகின் கண்களுக்கு தெரிய வர மேலும் இரண்டு தினங்கள் ஆனது என்றால் அங்குதான் நம் மனங்களில் வீற்றிருக்கும் ஏகாதிபத்திய சிந்தனையின் ஆணவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சக மனிதனுக்காக துரோகத்தை, சக மனிதன் பட்ட வேதனையை பகிர்ந்துகொள்ளும் நம்முடைய அக்கறையில் விழுந்திருக்கும் ஓட்டையை எந்தவகையில் நாம் சரி செய்வது என்கிற கேள்வி நமக்கு முன்னே எழுந்திருக்கிறது. கேரள மாநிலம் அட்டப்பாடியை அடுத்த முக்காலி கிராமத்தைச் சேர்ந்த மல்ல...