இடுகைகள்

நவம்பர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிலந்திக்காரன்

படம்
  நம்முடைய இலக்குகள் விரிவடைந்துக்கொண்டேயிருக்கின்றன. நம்முடைய பயணத்தின் தூரம் அதிகரித்தபடியே போகின்றன. நம்முடைய பார்வைகள் விசாலமாகிக் கொண்டிருக்கின்றன. ஒன்றைத்தவிர,..  நம்முடைய மக்களைத் தவிர! அவர்கள் உண்மைக்கு புறம்பானவர்களை நம்பிக்கொண்டிருக்கிறார்கள். பொய்களுக்கு வண்ணம் தீட்டுபவனையெல்லாம் தலைவனாய் கருதிக்கொண்டிருக்கிறார்கள். யாரை நம்பி தங்களின் மதிப்புமிக்க வாழ்க்கையை ஒப்படைத்திருக்கிறார்களோ...அவர்கள்தான் இவர்களுக்கெதிரான வேலைகளை இலவசமாய் செய்து கொண்டிருக்கிறார்கள் என்கிற உண்மை தெரியாமலிருக்கிறார்கள். யார் தூக்கிவைத்து கொண்டாடப்படுகிறார்களோ... யாரை எல்லோரும் நம்பி தொலைக்கிறார்களோ... அவர்கள்தான் அத்தனை மக்களுக்குமான படுகுழிகளை அழகுபார்த்து வெட்டுகிறார்கள்”. அதனால்தான் சொல்ல வேண்டியிருக்கிறது....இங்கு நிம்மதியாக உறங்குவதற்கு இப்போதெல்லாம் இரவுகள் கிடைப்பதேயில்லை. தவறான வழிகாட்டுதல்களை திணித்துக்கொண்டிருக்கும் சில மனிதர்களிடம் இருந்து நம் மக்களுக்கு எப்படி புரியவைப்பது என்கிற கேள்வி நம் தலையை குடைந்து கொண்டிருக்கிறது. எதுவும் அறியாத அப்பாவி முகங்கள் சிலந்திகளின் ...

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கனவுலகம்

படம்
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கனவுலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. அது, எப்போதும் உயிர்ப்புடனே இருக்கிறது. நாம் எங்கிருக்கிறோம், எந்த நிலையில் இருக்கிறோம் என்கிற சுய நினைவை கடந்து அது எப்போதும் நமக்குள்ளே செயல்பட்டுக் கொண்டேயிருக்கிறது. பல நேரங்களில் நம்முடைய சுய வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களால் அவை எங்கேனும் ஓர் மறைவைத் தேடி மறைந்துக் கொள்கின்றன. நம்முடைய சிக்கல்களும், பிரச்சினைகளும் தீர்ந்தப் பிறகு அவை மீண்டும் மெல்லமாய் மேலெழும்ப ஆரம்பிக்கின்றன. அதைப் பற்றிய புரிதல்கள் யாருக்கு இருக்கிறதோ அவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். அல்லது தப்பிக்க முயற்சிக்கிறார்கள். வேறு வழி தேடியாவது அலைகிறார்கள். ஆனால், பலருக்கு இந்த மூன்றும் வாய்ப்பதேயில்லை. ஆகவேதான் பலருக்கு வாழ்க்கை மீதான பிடிப்பு இருப்பதேயில்லை. அவர்கள்தான் கால நீரில் மூழ்கி போய்விடுகிறார்கள்.

இப்போதெல்லாம்...... என்னத்தை சொல்ல

படம்
  முன்பெல்லாம் தமிழக பெண்பால் கவிஞர்கள் பெரும்பாலும் ஒளவையார் போல வாழ வைத்து பழக்கப்பட்டவர்கள்.  அப்போது சமூக சிந்தனையோடு திறமையும் ஒரு சேர குவிந்திருந்தது அவர்களிடம் எனவே, அவர்களை போற்றிப் பாடினர் மக்கள். ஆனால், இப்போதெல்லாம்...... என்னத்தை சொல்ல, மலரின் மென்மையை பெயரில் சுமந்துகொண்டு சுய வாழ்க்கையில் ஏற்பட்ட வெறுப்பில் ஏழைப் பெண்களுக்கெதிராக செய்கிற துரோகம், பாவம், இவருடைய அறியாமையைத் தான் நமக்கு காட்டுகிறது. சமூகத்தின் முகமாய் இருக்கக் கூடிய இவரைப் போன்றவர்கள் இப்படி சமூகத்தின் மீது அக்கறை இல்லாமல் இருந்தால் எப்படி...? குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்வியை மற்றவர்களின் மீது இப்படியா தினிப்பது? இவரைப் போன்றவர்களால் அப்பாவி பெண்கள்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகியிருக்கிறது என்பதை எப்போது இவர் உணருவார்...?

எச்சரிக்கையாயிருங்கள்....எசமானர்களே!

படம்
யாரை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் இழிசொல் கொண்டு அழைக்கலாம், இன்னொரு மனிதரின் முன் இதமாக பேசி இதயத்தோடு விஷம் தடவலாம்... என்று, இறுமாப்போடு திரிகிற உங்களை இனியும் விடமாட்டோம் நாங்கள். பொய்களின் மணல் கொண்டு ஆயிரம் காரணங்களை தயார் செய்திருக்கிறீர்கள் நீங்கள்... நீரில் கரையத்தான் போகிறது உங்கள் பொய்களின் சிலைகள்... அப்போது அலையடிக்கும் ஆழ் நீரில் உங்களால் மீண்டும் எழுந்திருக்கவே முடியாமல் போகும், எச்சரிக்கையாயிருங்கள்....எசமானர்களே! நிறத்தால் பேதம் பார்த்த முட்டாள்களை விட கேவலமானது உங்கள் மனம்.  அது படுகுழிகளால் நிரம்பியிருக்கிறது...அதன் மேல் மலர் வனமா...? நீங்கள் வாழ்வதற்காக எதையும் செய்ய துணிந்திருக்கிறீர்கள்... பொதுவுடைமை பேசுவது, பொழுதுகளில் மக்களை திரட்டுவது., பொன்னிற வார்த்தைகளால் வாய்ஜாலம் போடுவது.., உரிமைக்காக போராடிய தலைவர்களின் பெயர்களை கொண்டு உங்கள் சுயதேவைகளை பூர்த்தி செய்துகொள்ள நினைக்கிற முட்டாள்களே.... உங்கள் ஏமாற்று வேலைகள் வெளிவரத்தான் போகிறது அப்போது வெக்கி சாகத்தான் போகிறீர்கள்.... அதுவரை அமைதியாயிருப்போம் நாங்கள் ...